யாரவது இப்படி பண்ணுவாங்களா..? கௌதமி பேச்சால் வெடித்த சர்ச்சை..! அட கொடுமைய..! Trending News

ஆந்திராவில் இருந்து வந்து, தமிழ் சினிமாவில் குரு சிஷ்யன் படம் மூலம் ரஜினிக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை கௌதமி. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை கௌதமி, தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

கௌதமி

டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிக விரைவில் பிரபலமானார். குறிப்பாக ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, ராம்கி, முரளி போன்ற பல நடிகர்களுக்கு கௌதமி ஜோடியாக நடித்தார்.

இந்நிலையில் நடிகர் கமலஹாசனுடன் தேவர் மகன் படத்தில் கௌதமி காதலியாக நடித்திருந்தார். இதில் ரேவதியை தான் கமல் திருமணம் செய்துக்கொள்வார். இந்த படத்தில் நடித்த போது, கமலுக்கும் கௌதமி இருவருக்கும் இடையே நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது.

கமலுடன் ரிலேஷன்ஷிப்

ஒரு கட்டத்தில் நடிகர் கமலஹாசன், தனது மனைவி சரிகாவை விட்டு பிரிந்தார். அதன்பின் கௌதமியுடன் குடும்பம் நடத்தினார். தாலி கட்டாமல் 13 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். லிவிங் டு ரிலேஷன்ஷிப் முறையில் இருந்த அவர்கள், ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

இதையும் படியுங்கள்: மாமனார் செய்கிற வேலையா இது..? எவ்வளவு சொல்லியும் கேக்கல.. தனுஷ் விவாகரத்து.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..

மகளுக்கு பாதுகாப்பு வேண்டும்

அப்போது கௌதமியிடம் இதுகுறித்து கேட்டபோது, நான் என்னுடைய மகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதால்தான் கமலுடன் உறவை முறித்துக் கொண்டு, அவரை விட்டு பிரிந்து விட்டேன் என்று கூறியிருந்தார்.

நடிகர் கமல்ஹாசன் குறித்து கவுதமி இப்படி கூறியிருந்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் கோவை தெற்கு தொகுதி சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் நடிகர் கமல்ஹாசனை எதிர்த்து கௌதமி பிரச்சாரம் செய்ததும் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அறிவு கிடையாது

இதுகுறித்து பேசி உள்ள பத்திரிக்கையாளர் சேகுவேரா, என்னை பொருத்தவரை நடிகை கௌதமிக்கு அறிவு கிடையாது என்றுதான் சொல்வேன். ஒரு குழந்தை இருக்கும்போது, திருமணம் ஆகி பலமுறை விவாகரத்தான ஒரு ஆண் ஒருவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் எந்த பெண்ணும் இருக்க மாட்டார்.

இதையும் படியுங்கள்: என் செல்லப்பேரு ஆப்பிள்.. நடிகை முமைத் கான் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

ஏனெனில் தனக்கு மகள் இருக்கிறார் என்ற நிலையில், அவ்வாறு செய்ய மாட்டார்கள். ஏனென்றால் நாளை அந்தப் பெண் வளர்ந்து பெரியவளாகும் தந்தை ஸ்தானத்தில் இருந்து அந்த பெண்ணுக்கு யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள்.

பெண்கள் விஷயத்தில் பலவீனமானவர்

கமலஹாசன் பெண்கள் விஷயத்தில் மிகவும் பலவீனமானவர் என்பது ஊர் அறிந்த விஷயம். அப்படிப்பட்ட ஒருவருடன் இருக்கும்போது கௌதமி இப்படி ஒரு கருத்தை கூறி இருப்பது, சந்தேகமாக தான் இருக்கிறது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.