பிரபல நடிகரை கட்டி அணைத்த பானுமதி.. மூச்சு விட முடியாமல் கதறிய நடிகர்..! Trending News

தமிழ் சினிமாவில் இப்போது மட்டுமல்ல, கருப்பு வெள்ளை படங்கள் வந்த காலகட்டத்திலேயே கெத்து காட்டிய நடிகைகள் ஒரு சிலர் இருக்கவே செய்திருக்கின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் தயாரிப்பாளர்களை, இயக்குனர்களை, ஏன் உடன் நடிக்கும் நடிகர்களையே பாடாய்படுத்திய நடிகைகள் சிலர் உண்டு.

பானுமதி

நடிகை பானுமதி, கருப்பு வெள்ளை திரைப்படங்கள் வந்த காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர். பியு சின்னப்பா, எம்ஜிஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான் நடிகர்களுடன் நடித்தவர். எம்ஜிஆரை தமிழ் சினிமாவில் சின்னவர் என்றுதான் அழைப்பதுதான் வழக்கம்.

எம்ஜிஆரையே பெயர் சொல்லி அழைத்தவர்

ஆனால் அவரையே மிஸ்டர் எம்ஜி ராமச்சந்திரன் என பல பேர் முன்னிலையில் பெயர் சொல்லி அழைக்கும் வழக்கம் கொண்டவர் பானுமதி. ஆனால் பதிலுக்கு எம்ஜிஆர் அவரை பெயர் சொல்லி அழைக்க மாட்டார். அம்மா என்றுதான் கூப்பிடுவார்.

இதுகுறித்து ஒரு நேர்காணலில் பத்திரிகையாளர் இதயக்கனி கூறியதாவது,

பானுமதியை பொருத்தவரை அவர் இஷ்டப்பட்டால் ஒரு காட்சியில் நடிப்பார். இல்லை என்றால் மறுத்து விடுவார். அதற்கு பின் அவரிடம் யாரும் எதுவும் சொல்லி சம்மதிக்க வைத்து விட முடியாது.

அப்படிப்பட்ட அனுபவம் எம்ஜிஆருக்கே நடந்திருக்கிறது. நாடோடிமன்னன் படம் எம்ஜிஆர் தயாரித்து, அவரே டைரகட் செய்த படம். இந்த படத்தில் ஒரு காட்சியில் இறந்து போன பானுமதியை கையில் தூக்கியபடி எம்ஜிஆர் நடப்பது போன்ற காட்சி.

இதையும் படியுங்கள்: வற்புறுத்தி கல்யாணம் பண்ண டைரக்டர்.. கடைசி வரை அந்த பெயரோடு வாழ்ந்த நடிகை..!

நடிக்க மறுப்பு

அந்த காட்சியில் நடிக்க மறுத்திருக்கிறார் பானுமதி. அப்படி எம்ஜிஆர் கையில் என்னை தூக்கிச் செல்வதை பார்த்தால் என் பிள்ளைகள், கணவர் என்னை தவறாக நினைப்பார்கள் என கூறி மறுத்திருக்கிறார். பிறகு டூப்பாக ஒரு துணை நடிகையை நடிக்க வைத்து எம்ஜிஆர் அந்த காட்சியை எடுத்திருக்கிறார்.

அதன்பிறகு அந்த படத்தில் மீண்டும் உயிர்பிழைத்து பானுமதி வருவது போல கதை இருந்தும், அதை மாற்றி விட்டு பானுமதி இறந்த காட்சியுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, சரோஜா தேவி நடிக்கும் காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கிறார் எம்ஜிஆர்.

அம்பிகாபதி படத்தில்

எம்ஜிஆரை மட்டுமின்றி சிவாஜி கணேசனுக்கும் பானுமதியுடன் நடிப்பது என்றால் பிரச்னைதான். ஏனெனில் நடிப்பில் சிவாஜி, தன்னை முந்தி விடுவாரோ என்று எப்போதுமே பானுமதிக்கு ஒரு எண்ணம் உண்டு.

இதையும் படியுங்கள்: கடவுளும் என்னை தண்டிச்சிட்டார்.. நீங்களும் இப்படியா..? காதல் சரவணன் மனைவி கண்ணீர்..!

அதனால் ரிகர்சலில் ஒரு மாதிரி நடித்துவிட்டு, ஷாட்டில் வேறு மாதிரி நடித்து விடுவார் பானுமதி. குறிப்பாக அம்பிகாபதி படத்தில் நடித்த போது, சிவாஜி கணேசனை, பானுமதி கட்டிப்பிடித்துள்ள நிலையில் சிவாஜி கணேசன் வசனம் பேச வேண்டும்.

திணறிய சிவாஜி

ஆனால் சிவாஜி கணேசனை இறுக்கமாக கட்டியணைத்து, ஒரு கோழிக்குஞ்சை அமுக்குவது போல நிறுத்தியிருக்கிறார் பானுமதி. அப்போது வசனம் பேச முடியாமல் சிவாஜியே திணறி இருக்கிறார், என்று அந்த நேர்காணலில் இதயக்கனி கூறியிருக்கிறார்.

நடிகர் சிவாஜி கணேசன், எவ்வளவு பெரிய நடிகர். அவரையே பேச விடாமல் இப்படி கட்டியணைத்து பானுமதி இப்படி மூச்சு விட முடியாமல் திணறடித்து இருக்கிறாரே என இதையறிந்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.