“கேரவேன் வந்த பிறகு.. பட வாய்ப்புக்காக படுக்கை..” ரகசியம் உடைத்த நடிகை Y விஜயா..! Trending News

ஆந்திராவில் இருந்து தமிழ் திரை உலகுக்குள் நுழைந்த Y விஜயா கடப்பாவில் இருந்து நடிக்க வந்தவர். இவர் கிளாசிக்கல் நடனம் ஆடுவதில் வல்லவர் என்பது பலருக்கும் தெரியாது.

இதையும் படிங்க: கேரி பேக் ட்ரெஸ்.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் ராஷ்மிகா மந்தனா..!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர். 70-களில் இவர் திரை உலகில் மிகச் சிறப்பான முறையில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை பெற்றிருந்தார்.

நடிகை Y விஜயா..

1974 இவர் நடிப்பில் வெளி வந்த வாணி ராணி முதல் கிளிஞ்சல்கள், தில்லுமுல்லு, காதலித்துப்பார், மண்வாசனை, வாழ்க்கை, பூவிலங்கு, மங்கம்மா சபதம், எங்க ஊரு பாட்டுக்காரன், அவள் மெல்ல சிரித்தால், ராஜாதி ராஜா, பாண்டிய நாட்டு, தங்கம், ஆடி வெள்ளி ராஜகாளியம்மன், பிரியமான தோழி போன்ற படங்களில் நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பெரும்பாலான படங்களில் வில்லியாகவும் கெட்ட கேரக்டர் ரோல் உடைய கதாபாத்திரத்தை செய்து அனைவரது மனதிலும் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்ட இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்.

இந்நிலையில் இன்று பெரும்பாலான இணையங்களில் வெளி வரும் அட்ஜஸ்மெண்டுகள் குறித்து உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அதிலும் குறிப்பாக திரைப்படத் துறையில் பெண்களுக்கு ஏற்படும் சங்கடங்கள் குறித்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தொடர்ந்து கூறி இருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது பிரபல நடிகையான ஒய் விஜயா சமீபத்திய பேட்டி ஒன்று தன்னுடைய படப்பிடிப்பு நடக்கக்கூடிய சமயத்தில் நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

கேரவேன் வந்த பிறகு..

அது பற்றிய விரிவான தகவல்களை இனி பார்க்கலாம். இதில் முதலில் பேசி Y விஜயா சமீப காலமாக பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்வது பற்றி எல்லோரும் பேசி வருகிறார்கள். இதெல்லாம் எனக்கு புதிதாக இருக்கிறது.

மேலும் தான் நடித்த காலத்தில் எல்லாம் இப்படியான பிரச்சனைகளை தான் கேள்விப்பட்டது இல்லை என்ற திடுக்கிடும் தகவலை சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.


பட வாய்ப்புக்காக படுக்கை..

அது மட்டுமல்லாமல் தாங்கள் நடிக்கக்கூடிய காலத்தில் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்தது இல்லை என்று கூறியவர் தற்போது கேரவேனின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது.

நாங்கள் நடிக்கும் போதெல்லாம் கேரவேன் இல்லை. எந்த ஊரில் படப்பிடிப்பு நடக்கிறதோ அந்த ஊரில் உள்ள சிலரது வீடுகளில் நடிகைகள் ஆடைகளை மாற்றிக்கொள்வோம். நடிகர்கள் மரத்தடியிலே, பேருந்து நிற்கும் இடத்திலோ ஆடை மாற்றிக் கொள்வார்கள்.

மேலும் படத்தின் வசனங்கள் காட்சிகள் அனைத்தும் பொது வெளியில் மரத்தடியில் வைத்துத் தான் இயக்குனரும் நடிகர்களும் பரிமாறிக் கொள்வார்கள்.

ஆனால் இப்போது அனைத்தும் பேப்பராகிவிட்டது கேராவனுக்குள் நடிகைகள் சென்று ஒளிந்து கொள்கிறார்கள் நடிகர் நடிகைகளுடன் படக்குழுவில் இருப்பவர்கள் பழகுவது என்பது இயலாத காரியமாக உள்ளது.

இதையும் படிங்க: பசங்களுக்கு 5 நிமிஷத்துல முடிஞ்சிடும்.. ஆனா.. பெண்களுக்கு.. புலம்பி தள்ளும் ரச்சிதா மகாலட்சுமி..!

இதனால் கூட இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் தலைதூக்கி இருக்கலாம் என்று நடிகை ஒய் விஜயா பேசிய பேச்சாளர் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு அவர் சொன்ன விஷயத்திலும் உண்மை உள்ளதே என்று சொல்லி இருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.